இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 ஜூன், 2012

அன்பின் தந்தையே!

எனது பாசத்திற்குரிய தந்தையே!
அன்பெனும் கூட்டில் எமை கலைத்திடாது காத்த என் உயிரே!
எனது சிறு வயதில் எப்படி வளர்த்தீர்களோ அதே போல்
செல்லமாய் இறுதிவரை பார்த்தீர்களே!
இதயமெல்லாம் துயரமாகவே கனக்கிறது,
உறங்கினாலோ உங்கள் கனவுகள் வந்து சுடுகிறது!
உங்கள் நோய் அறிந்து துயர் என்னை நெருங்கியது
உங்கள் பிரிவறிந்து மகிழ்வென்னை பிரிந்தது!
எனக்கு பின்னும் நீங்கள் வாழவேண்டும் என நினைத்தேன்
அந்தோ இடி விழுந்த செய்தியாலே நான் துடித்தேன்!
அப்பு அப்பு என தேனொழுக அழைத்த வார்த்தை
இனி என் செவிகளுக்கு கேளாதா என நினைத்து
நாளும் பொழுதும் இங்கு தவிக்கின்றேன்!
எனக்கொரு துயரென்றால் உங்களிடம் சொல்லி
ஆறுதல் பெற்று வந்தேன்
ஆனால் இன்றோ மிகப்பெரும் துயர் கொண்டேன் தந்தையே 
ஓடி வந்து எந்தன் துன்பம் நீக்க மாட்டீர்களோ தந்தையே!
காலங்கள் மாறும்,காட்சிகளும் மாறும் ஆனாலும் 
உங்கள் நினைவுகள் நிலைத்திருக்கும் நெஞ்சிலே! 
நீங்கள் என்றுமே என்னுள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்! தந்தையே!
இது நான் உங்களுக்கு செலுத்தும் வணக்க நிகழ்வல்ல,
உங்களுக்கு நான் எழுதும் கடிதம்.
என்றென்றும் உங்கள் செல்லக்குட்டி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக