இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 டிசம்பர், 2015

அம்மாவின் நினைவுகள்!

காலச்சதியதால் இழந்தோம் எம் அம்மாவை!
ஊரோடு உறவாடி,உறவோடும் அன்பாகி
துன்பங்கள் வந்தபோதும் சளைக்காது எதிராடி,
வறுமையிலும் பிள்ளைகள் பசியறியா உணவூட்டி,
நல்ல உணர்வுதனை சேர்த்தூட்டி,வளர்த்து ஆளாக்கி,
இன்று எமை தனியாக்கி விரைந்தீர்களோ அம்மா!