எங்கள் அன்புத்தந்தையே!உங்களைப் பிரிந்து ஐந்தாண்டுகள் ஆனபோதிலும் எம்மால் இன்னுமே ஜீரணிக்க முடியவில்லை.நீங்கள் பிரிந்து விட்டதாக எம் மனம்தனில் எண்ணவே முடியவில்லை.கந்தையா-நாகமுத்து தம்பதிகளின் இரண்டாவது மகனாக வந்துதித்த(15-03-1926)நீங்கள் நாகலிங்கம்-பார்வதி தம்பதிகளின் புதல்வியான கனகம்மாவை திருமணம் செய்து எட்டுப் பிள்ளைகளை பெற்று புளியங்கூடலில் வாழ்ந்து வந்தீர்கள்,காலம் செய்த கோலம் இடப்பெயர்வு என்ற ஒன்று வந்து எம்மை நாலா திசையிலும் பிரித்து வைத்தது.புதிய உறவுகள்,புதிய நட்புக்கள்,புதிய ஊர்கள் என வாழ்க்கையே மாறிப்போனது.ஆனாலும் ஊரும் நினைவுகளுமாகவே காலம் கடந்தோடியது.தற்காலிகமாக கொழும்பிலே வாழ்ந்து வந்த நீங்கள் பின்னர் கச்சேரியடியில் வாழ்ந்து வந்த வேளையிலே(30-06-2009)உங்கள் நினைவுடனே நாமிருக்க எம் நினைவுடனே நீங்கள் இருக்க காலன் என்ற கயவனால் பறிக்கப்பட்டீர்கள்!தந்தையே நாளும் பொழுதும் உங்கள் நினைவுடனேயே இருக்கும் எமக்கு கனவுகள் கூட நீங்கள் எம்முடன் இருப்பதாகவே வருகின்றது.நீங்கள் கொடுத்த இந்த உயிரும் உடலும் நிலைத்திருக்கும் மட்டும் உங்கள் நினைவுகளும் நிலைத்திருக்கும்.
நெடுந்தீவை பிறப்பிடமாகவும்,புளியங்கூடலை வசிப்பிடமாகவும்,கொழும்பு, கச்சேரியடி ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த எமது தந்தையார் கந்தையா பசுபதி அவர்களின் மூன்றாம் ஆண்டு(30.06.2012)நினைவு நாளையொட்டி இவ்வலைப்பூ கனத்த இதயங்களுடன் ஆரம்பிக்கப்படுகிறது.
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 29 ஜூன், 2014
சனி, 30 நவம்பர், 2013
உயிரே எம் பெரியண்ணா!
உயிரே எம் பெரியண்ணா!எங்கே இன்று
நீங்களண்ணா?
வருடம் ஒன்று ஆனதே
நாங்கள் பேசித்தானண்ணா!
விதியா?இது சதியா?
ஏன்தான் எமக்கிந்த கதியண்ணா!
அன்பு என்றால் எம் அண்ணா
என்று இருந்தோமே-இன்று
எல்லாம் இழந்து போனோமே!
வார்த்தையில் சொல்ல முடியாது,
உங்கள் பாசம்தனை
எழுத்தில் அடக்க முடியாது.
உங்கள் நினைவுகள்
தோன்றும் போதெல்லாம்
எம் சுய நினைவே இழந்து போகிறது!
அண்ணா உங்கள் பிரிவென்பது
கனவாகிடாதோ
என மனம் ஏங்குகிறது!
பிரிவைக்காணா பிறப்பென்றால்
இன்னுமொரு முறை
பிறந்திடுவோம்,
அன்பே எங்கள் வாழ்வென்று
உலகிற்கு போதனை
செய்திடுவோம்.
அண்ணா உங்கள் நினைவோடு
எம் வாழ்காலம் கழியுமண்ணா!
செவ்வாய், 25 ஜூன், 2013
நான்கு ஆண்டுகள் ஆனதோ!!!

என் தந்தையே உங்களை நினையாத நாளேது?
ஞாயிறு, 3 மார்ச், 2013
கண்ணீருடன் 45ம் நாள்!
எங்களுக்கெல்லாம் முதல்வனாக வந்த அண்ணனே!
இன்று எம்மையெல்லாம் தவிக்க விட்டு
முதல்வனாகவே சென்றதேனோ அண்ணா?
உங்கள் பிள்ளைகளுக்கு இனி ஆறுதல் சொல்வார் யார் அண்ணா?
வேதனை தீயில் மாமா மாமா என்று உங்கள் சகோதரிகளின்
பிள்ளைகள் துடிக்கிறார் அண்ணா!
பெரியப்பா இனி skypeபிற்கு எப்போ வருவார் என
நீங்கள் சென்ற இடம் தெரியாமல் உங்கள் சகோதரர் பிள்ளைகள்
ஏங்குகிறார் அண்ணா!
எப்படித்தாங்குவோம் உங்கள் பிரிவுத் துயரை?
தாய்க்கு தலைமகனாக வந்த அண்ணனே,
அம்மா தவிப்பது தெரியுமோ அண்ணா?
ஐயாவிற்கு கடமைகள் செய்து முடித்து விட்டு
அவர் பின்னாலே சென்றீர்களோ அண்ணா?
அண்ணி உங்களைப்பற்றி சொல்லி சொல்லி அழுவதை
எப்படித்தான் பார்த்து நிற்போம் அண்ணா?
மீண்டும் ஒரு பிறப்பெடுத்து எங்களிடம் ஓடி வரமாட்டீர்களா அண்ணா?
துயரோடு நிற்கிறோம் ஆறுதலுக்கு இனி யாரண்ணா?
புதன், 6 பிப்ரவரி, 2013
என் ஆத்மாவில் என்றும் நீங்கள்!
எங்கள் உயிர் அண்ணாவே,பாசத்தின் இலக்கணமே,
எங்கண்ணா சென்றீர்கள் எமை இங்கு தவிக்க விட்டு!
சின்னஞ்சிறு தம்பியாய் நானிருந்த அந்நாட்களிலே
தலை சீவி அழகாய் உடை அணிவித்து என்னை அழகுபடுத்திய
நாட்களெல்லாம் என் கண்முன்னே தெரியுதண்ணா!
கோயில் தேர்த்திருவிழாவிற்கு வருடாந்தம் ஐந்து ரூபாய் தந்ததெல்லாம்
இன்றைக்கும் கைகளிலே இருப்பதுபோல் தோன்றுதண்ணா!
பெற்றோருடன் நாம் எண்மரும் ஒரே வீட்டில் குடியிருந்த
வாழ்க்கைதான் எனக்கு பொன்வாழ்வாய் தெரியுதண்ணா!
மீண்டும் புளியங்கூடல் பதியிலே நாம் ஒன்றாக வாழ்வதற்கு
கனவு கண்டவேளையிலே தந்தை உயிர் பறித்தான் பொல்லாத காலனவன்!
வந்த துயர் ஆறுமுன்னே உங்களையும் எம்மை விட்டு
பிரித்தானே பாசமற்ற கொடுங்கோலன்!
தூரம் தூரம் இருந்தாலும் பேசிக்கொள்வோம் இணையவழி முகம் பார்த்து,
இப்போ தெரியாத இடம் தன்னில் எம் அண்ணாவை மறைத்து விட்டான் இறைவன் எனும் மாபாவி!
என் அம்மாவை பார்த்து அண்ணாவை கேட்டு அழ என்னால் முடியவில்லை!
என் சகோதரர் இடத்திலும் அண்ணாவை பற்றி சொல்லி அழ என்னால் முடியவில்லை!அண்ணி தவிக்கையிலே பிள்ளைகள் கதறையிலே
யாரிடத்தில்தான் நான் இனி அண்ணாவின் கதை பேசுவது?
குடும்பத்தில் முதற் பிள்ளையாய் வந்து எம் எழுவருக்கும் அண்ணாவாக இருந்து கண்டித்து,தண்டித்து பண்பாடுதனை புகட்டி
பாசத்தை வார்த்தைகளினூடே ஊட்டி வளர்த்த எம் அண்ணாவே
உங்களை எப்பிறப்பில் காண்போம் இனி!?
உங்கள் நினைவுகள் எம் நிழல்களாக தொடர்கிறது அண்ணா!
உங்கள் குட்டித்தம்பி நான் கூட ஒரு நாள் மறைந்து போவது நிச்சயம் ஆனாலும் உங்கள் நினைவுகள் என் ஆத்மாவில் அழியாது வாழும் அண்ணா.
எங்கண்ணா சென்றீர்கள் எமை இங்கு தவிக்க விட்டு!
சின்னஞ்சிறு தம்பியாய் நானிருந்த அந்நாட்களிலே
தலை சீவி அழகாய் உடை அணிவித்து என்னை அழகுபடுத்திய
நாட்களெல்லாம் என் கண்முன்னே தெரியுதண்ணா!
கோயில் தேர்த்திருவிழாவிற்கு வருடாந்தம் ஐந்து ரூபாய் தந்ததெல்லாம்
இன்றைக்கும் கைகளிலே இருப்பதுபோல் தோன்றுதண்ணா!
பெற்றோருடன் நாம் எண்மரும் ஒரே வீட்டில் குடியிருந்த
வாழ்க்கைதான் எனக்கு பொன்வாழ்வாய் தெரியுதண்ணா!
மீண்டும் புளியங்கூடல் பதியிலே நாம் ஒன்றாக வாழ்வதற்கு
கனவு கண்டவேளையிலே தந்தை உயிர் பறித்தான் பொல்லாத காலனவன்!
வந்த துயர் ஆறுமுன்னே உங்களையும் எம்மை விட்டு
பிரித்தானே பாசமற்ற கொடுங்கோலன்!
தூரம் தூரம் இருந்தாலும் பேசிக்கொள்வோம் இணையவழி முகம் பார்த்து,
இப்போ தெரியாத இடம் தன்னில் எம் அண்ணாவை மறைத்து விட்டான் இறைவன் எனும் மாபாவி!
என் அம்மாவை பார்த்து அண்ணாவை கேட்டு அழ என்னால் முடியவில்லை!
என் சகோதரர் இடத்திலும் அண்ணாவை பற்றி சொல்லி அழ என்னால் முடியவில்லை!அண்ணி தவிக்கையிலே பிள்ளைகள் கதறையிலே
யாரிடத்தில்தான் நான் இனி அண்ணாவின் கதை பேசுவது?
குடும்பத்தில் முதற் பிள்ளையாய் வந்து எம் எழுவருக்கும் அண்ணாவாக இருந்து கண்டித்து,தண்டித்து பண்பாடுதனை புகட்டி
பாசத்தை வார்த்தைகளினூடே ஊட்டி வளர்த்த எம் அண்ணாவே
உங்களை எப்பிறப்பில் காண்போம் இனி!?
உங்கள் நினைவுகள் எம் நிழல்களாக தொடர்கிறது அண்ணா!
உங்கள் குட்டித்தம்பி நான் கூட ஒரு நாள் மறைந்து போவது நிச்சயம் ஆனாலும் உங்கள் நினைவுகள் என் ஆத்மாவில் அழியாது வாழும் அண்ணா.
ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013
தந்தையே அழைத்தாரோ அண்ணா?

எங்கள் பெற்றோருக்கு முதற் பிள்ளையாய் 30.08.1951ல் வந்து பிறந்தார் எம் அண்ணா.அவருக்கு அரசரெத்தினம் என பெயர் சூட்டினார் எம் தந்தை.ஊராரும் உறவுகளும் அரசன் என்று அழைத்து மகிழ்ந்தனர்.தம் மூத்த பிள்ளையை அரசனாகவே பார்த்தனர் பெற்றோர்.செல்லமாகவே வளர்த்தனர்.பெரியவன் என்று அழைத்த பெற்றோர் தமது இதயத்தின் பெரும்பகுதியில் அவரையே நிறைத்து வைத்திருந்தனர்.தந்தை இறப்பதற்கு சில மாதங்கள் முன்பு"அண்ணாவை யோசிக்காமல் இருக்கச்சொல்"என என்னிடம் தொலைபேசியில் கூறிய வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.அவர் எந்தப்பிள்ளையை அதிகம் நேசித்தாரோ அந்தப்பிள்ளையின் மடியிலேயே தந்தை உயிர் பிரிந்தது என்பதும் அதிசயிக்கத்தக்க உண்மை!தனது மூத்த புதல்வனை பிரிந்திருக்க முடியாமல் எம்மையெல்லாம் கதிகலங்க வைத்து எம் பெரியண்ணாவையும் 18.01.2013 வெள்ளிக்கிழமை அன்று சொல்லாமல் கொள்ளாமல் தன்னுடன் தந்தை அழைத்துக்கொண்டு விட்டார்.நாம் இனி எப்பிறப்பில் காண்போம் தந்தையையும்,அண்ணாவையும்?
செவ்வாய், 23 அக்டோபர், 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)