இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

தந்தையே அழைத்தாரோ அண்ணா?

காலம் துயரங்களை எமக்குள் திணித்துக்கொண்டே செல்கிறது,வாழ்வின் வசந்தமோ ஓடி ஒளிந்துகொள்கிறது.தந்தையின் பிரிவுத்துயர் தணியாமல் கனன்று கொண்டே இருக்கிறது,அதற்குள் அண்ணாவையும் பிரித்து விட்டான் காலன் எனும் கொடும்பாவி!
எங்கள் பெற்றோருக்கு முதற் பிள்ளையாய் 30.08.1951ல் வந்து பிறந்தார் எம் அண்ணா.அவருக்கு அரசரெத்தினம் என பெயர் சூட்டினார் எம் தந்தை.ஊராரும் உறவுகளும் அரசன் என்று அழைத்து மகிழ்ந்தனர்.தம் மூத்த பிள்ளையை அரசனாகவே பார்த்தனர் பெற்றோர்.செல்லமாகவே வளர்த்தனர்.பெரியவன் என்று அழைத்த பெற்றோர் தமது இதயத்தின் பெரும்பகுதியில் அவரையே நிறைத்து வைத்திருந்தனர்.தந்தை இறப்பதற்கு சில மாதங்கள் முன்பு"அண்ணாவை யோசிக்காமல் இருக்கச்சொல்"என என்னிடம் தொலைபேசியில் கூறிய வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.அவர் எந்தப்பிள்ளையை அதிகம் நேசித்தாரோ அந்தப்பிள்ளையின் மடியிலேயே தந்தை உயிர் பிரிந்தது என்பதும் அதிசயிக்கத்தக்க உண்மை!தனது மூத்த புதல்வனை பிரிந்திருக்க முடியாமல் எம்மையெல்லாம் கதிகலங்க வைத்து எம் பெரியண்ணாவையும் 18.01.2013 வெள்ளிக்கிழமை அன்று சொல்லாமல் கொள்ளாமல் தன்னுடன் தந்தை அழைத்துக்கொண்டு விட்டார்.நாம் இனி எப்பிறப்பில் காண்போம் தந்தையையும்,அண்ணாவையும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக