இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 நவம்பர், 2017

இரண்டாம் ஆண்டு நினைவுகள்!

இரண்டு ஆண்டுகள் ஓடி மறைந்ததே அம்மா!
மனத்துயர் இன்னும் ஓயாமல் அடிக்குதே அம்மா!
ஸ்கைப்பில் வந்து கதைத்த நினைவுகள் 
நகைச்சுவையோடு சிரித்த பொழுதுகள் 
சுவிஸ்,ஜெர்மனி வந்து திரும்பிய மீட்டல்கள்
எல்லாம் இன்றுபோல் இருக்கிறது அம்மா!
போலிகள் உலகம் அம்மா!
உலகமே போலி அம்மா!
உடல் கூட போலி அம்மா!
வாழ்க்கையும் போலி அம்மா!
கனவுகள் போலே எல்லாம் கலைந்து 
போனதே அம்மா!
ஆறுதல் தேட தந்தையும் இல்லை! 
தேடி அழைக்க அன்னையும் இல்லை!
பாசத்தை கொட்ட இருவரும் இல்லை!
எப்படித்தானோ நினைவை மறப்பது?
காவியம் தானே எந்தனுக்கு நீங்கள்!
காலத்தால் அழிய விடாது பொக்கிஷமாய் 
காப்பேன் உங்கள் வரலாறுதனை!
(எமது தாயார் திருமதி கனகம்மா பசுபதி அவர்கள் 04.11.2015 அன்று எம்மை விட்டு பிரிந்து 04.11.2017ல் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு இது இடுகையிடப்படுகிறது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக