இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 30 நவம்பர், 2013

உயிரே எம் பெரியண்ணா!

உயிரே எம் பெரியண்ணா!எங்கே இன்று 
நீங்களண்ணா?
வருடம் ஒன்று ஆனதே
நாங்கள் பேசித்தானண்ணா!
விதியா?இது சதியா?
ஏன்தான் எமக்கிந்த கதியண்ணா!
அன்பு என்றால் எம் அண்ணா 
என்று இருந்தோமே-இன்று 
எல்லாம் இழந்து போனோமே!
வார்த்தையில் சொல்ல முடியாது,
உங்கள் பாசம்தனை 
எழுத்தில் அடக்க முடியாது.
உங்கள் நினைவுகள் 
தோன்றும் போதெல்லாம் 
எம் சுய நினைவே இழந்து போகிறது!
அண்ணா உங்கள் பிரிவென்பது 
கனவாகிடாதோ 
என மனம் ஏங்குகிறது!
பிரிவைக்காணா பிறப்பென்றால் 
இன்னுமொரு முறை 
பிறந்திடுவோம்,
அன்பே எங்கள் வாழ்வென்று 
உலகிற்கு போதனை 
செய்திடுவோம்.
அண்ணா உங்கள் நினைவோடு 
எம் வாழ்காலம் கழியுமண்ணா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக