இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 29 ஜூன், 2014

ஐந்தாம் ஆண்டாக தவிக்கின்றோம்!

எங்கள் அன்புத்தந்தையே!உங்களைப் பிரிந்து ஐந்தாண்டுகள் ஆனபோதிலும் எம்மால் இன்னுமே ஜீரணிக்க முடியவில்லை.நீங்கள் பிரிந்து விட்டதாக எம் மனம்தனில் எண்ணவே முடியவில்லை.கந்தையா-நாகமுத்து தம்பதிகளின் இரண்டாவது மகனாக வந்துதித்த(15-03-1926)நீங்கள் நாகலிங்கம்-பார்வதி தம்பதிகளின் புதல்வியான கனகம்மாவை திருமணம் செய்து எட்டுப் பிள்ளைகளை பெற்று புளியங்கூடலில் வாழ்ந்து வந்தீர்கள்,காலம் செய்த கோலம் இடப்பெயர்வு என்ற ஒன்று வந்து எம்மை நாலா திசையிலும் பிரித்து வைத்தது.புதிய உறவுகள்,புதிய நட்புக்கள்,புதிய ஊர்கள் என வாழ்க்கையே மாறிப்போனது.ஆனாலும் ஊரும் நினைவுகளுமாகவே காலம் கடந்தோடியது.தற்காலிகமாக கொழும்பிலே வாழ்ந்து வந்த நீங்கள் பின்னர் கச்சேரியடியில் வாழ்ந்து வந்த வேளையிலே(30-06-2009)உங்கள் நினைவுடனே நாமிருக்க எம் நினைவுடனே நீங்கள் இருக்க காலன் என்ற கயவனால் பறிக்கப்பட்டீர்கள்!தந்தையே நாளும் பொழுதும் உங்கள் நினைவுடனேயே இருக்கும் எமக்கு கனவுகள் கூட நீங்கள் எம்முடன் இருப்பதாகவே வருகின்றது.நீங்கள் கொடுத்த இந்த உயிரும் உடலும் நிலைத்திருக்கும் மட்டும் உங்கள் நினைவுகளும் நிலைத்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக