இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 3 மார்ச், 2013

கண்ணீருடன் 45ம் நாள்!

எங்களுக்கெல்லாம் முதல்வனாக வந்த அண்ணனே! இன்று எம்மையெல்லாம் தவிக்க விட்டு முதல்வனாகவே சென்றதேனோ அண்ணா? உங்கள் பிள்ளைகளுக்கு இனி ஆறுதல் சொல்வார் யார் அண்ணா? வேதனை தீயில் மாமா மாமா என்று உங்கள் சகோதரிகளின் பிள்ளைகள் துடிக்கிறார் அண்ணா! பெரியப்பா இனி skypeபிற்கு எப்போ வருவார் என நீங்கள் சென்ற இடம் தெரியாமல் உங்கள் சகோதரர் பிள்ளைகள் ஏங்குகிறார் அண்ணா! எப்படித்தாங்குவோம் உங்கள் பிரிவுத் துயரை? தாய்க்கு தலைமகனாக வந்த அண்ணனே, அம்மா தவிப்பது தெரியுமோ அண்ணா? ஐயாவிற்கு கடமைகள் செய்து முடித்து விட்டு அவர் பின்னாலே சென்றீர்களோ அண்ணா? அண்ணி உங்களைப்பற்றி சொல்லி சொல்லி அழுவதை எப்படித்தான் பார்த்து நிற்போம் அண்ணா? மீண்டும் ஒரு பிறப்பெடுத்து எங்களிடம் ஓடி வரமாட்டீர்களா அண்ணா? துயரோடு நிற்கிறோம் ஆறுதலுக்கு இனி யாரண்ணா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக