
நெடுந்தீவை பிறப்பிடமாகவும்,புளியங்கூடலை வசிப்பிடமாகவும்,கொழும்பு, கச்சேரியடி ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த எமது தந்தையார் கந்தையா பசுபதி அவர்களின் மூன்றாம் ஆண்டு(30.06.2012)நினைவு நாளையொட்டி இவ்வலைப்பூ கனத்த இதயங்களுடன் ஆரம்பிக்கப்படுகிறது.
இந்த வலைப்பதிவில் தேடு
வியாழன், 29 ஜூன், 2017
எட்டாம் ஆண்டு நினைவுகள்!

வெள்ளி, 4 நவம்பர், 2016
அம்மாவின் பிரிவோடு ஓராண்டு!

நினைவுகள் மிதந்து வர வகையின்றி துடிக்கின்றோம்!
என் அம்மா!எங்கம்மா நீங்கள் இன்று?
வாழும் வழி முறைகள் சொன்னீர்கள் நீங்கள் அன்று!
என் அம்மா!எங்கம்மா நீங்கள் இன்று?
எங்களுக்கு போதனைகள் புத்தனாம்மா
சொல்லித் தந்தான்?
நாம் அழுத்த போதெல்லாம் காந்தியாம்மா
கண்ணீர் துடைத்தான்?
எம் பசி போக்க வள்ளலாம்மா
உணவு தந்தான்?
எமக்கு வழி காட்ட கண்ணனாம்மா
வந்து நின்றான்?
எல்லாமாகி நின்ற ஜோதியே!எம் அம்மா நீங்களன்றோ!
என் அம்மா!எங்கம்மா நீங்கள் இன்று?
எங்கள் பாசமிகு தாயார் திருமதி கனகம்மா பசுபதி அவர்கள் எமைப்பிரிந்து இன்று (04.11.2016)ஓராண்டு நிறைவுறுகின்றதை நினைவு கூரும் முகமாக எம் சோகங்களை தாங்கி இப்பதிவு இடப்படுகிறது.
ஞாயிறு, 19 ஜூன், 2016
ஏழு ஆண்டுகள் ஆகியும் தேடுகிறோம்!
![]() |
பிரிவு:30.06.2009 |
உங்களை பிரிந்து!
ஆனாலும் துயர் போகவே இல்லை
எங்களை பிரிந்து.
உங்கள் தலைப்பா கட்டும்,
வேஷ்ட்டி சண்டிக்கட்டும்
புளியங்கூடல் மண்ணில்
மிடுக்காக நீங்கள் நடந்த நடையும்
இன்னும் எம் மனக்கண் முன்
குலையாது நிற்கிறது.
நியாயத்தின் பக்கம் நிற்பதும்
மனிதாபிமானத்திற்காக பேசுவதும்
உங்கள் வாழ்க்கையில்
இயல்பான ஒன்றாக இருந்தது.
உங்களுக்குள் எழும் கடும்
கோபங்கள் கூட பாசத்தினால் ஏற்படும்
உணர்வுகளாகவே இருந்தது.
எப்படிப்பட்ட பகையாளியானாலும்
வீடு தேடி வந்து விட்டால்
வரவேற்கும் குணம் உங்களுடையது.
பொன்,பொருளை விடவும்
நற்குணமே சிறந்ததென வாழ்ந்த
உங்கள் மனம் போல் இனியொரு
மனதை காண முடியாதா என்ற
ஏக்கத்துடனேயே தினமும்
சுமக்கிறோம் கலையாத உங்கள்
நினைவுகளை தந்தையே!
ஞாயிறு, 17 ஜனவரி, 2016
வியாழன், 24 டிசம்பர், 2015
திங்கள், 29 ஜூன், 2015
வியாழன், 29 ஜனவரி, 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)