இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 நவம்பர், 2016

அம்மாவின் பிரிவோடு ஓராண்டு!

அம்மாவின் பிரிவோடு ஓராண்டாய் தவிக்கின்றோம்!
நினைவுகள் மிதந்து வர வகையின்றி துடிக்கின்றோம்!
என் அம்மா!எங்கம்மா நீங்கள் இன்று?
வாழும் வழி முறைகள் சொன்னீர்கள் நீங்கள் அன்று!
 என் அம்மா!எங்கம்மா நீங்கள் இன்று?
எங்களுக்கு போதனைகள் புத்தனாம்மா
சொல்லித் தந்தான்?
நாம் அழுத்த போதெல்லாம் காந்தியாம்மா
கண்ணீர் துடைத்தான்?
எம் பசி போக்க வள்ளலாம்மா
உணவு தந்தான்?
எமக்கு வழி காட்ட கண்ணனாம்மா
வந்து நின்றான்?
எல்லாமாகி நின்ற ஜோதியே!எம் அம்மா நீங்களன்றோ!
என் அம்மா!எங்கம்மா நீங்கள் இன்று?

எங்கள் பாசமிகு தாயார் திருமதி கனகம்மா பசுபதி அவர்கள் எமைப்பிரிந்து இன்று (04.11.2016)ஓராண்டு நிறைவுறுகின்றதை நினைவு கூரும் முகமாக எம் சோகங்களை தாங்கி இப்பதிவு இடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக